search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழைய குற்றவாளிகள் 2 பேர் கைது
    X

    பழைய குற்றவாளிகள் 2 பேர் கைது

    • பழைய குற்றவாளிகள் 2 பேர் சுற்றி கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • போலீசார்அவர்கள்2 பேரையும் கைது செய்தனர்.

    அந்தியூர்:

    ஈரோடுமாவட்டம் அந்தியூர் பிரம்மதேசம் பாலம் அருகே பழைய குற்றவாளிகள் 2 பேர் சுற்றி கொண்டு இருப்பதாக அந்தியூர்போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர்தனபால் அந்த பகுதியில் சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டார்.

    அப்போது அந்த வழியாக வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்த போது அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மேல் ஆத்தூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த அபு என்கிற சிவலிங்கம் (38),

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எலந்த கோட்டை காந்தி நகரை சேர்ந்த சுரேஷ் என்கிற சுள்ளான் சுரேஷ் (34) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து 2 பேரையும் பிடித்து விசாரித்த போது அவர்கள் மீது பல்ேவறு வழக்குகள் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார்அவர்கள்2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்க ளிடம் இருந்து 16 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×