search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 மோட்டார் சைக்கிள்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிப்பு
    X

    2 மோட்டார் சைக்கிள்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிப்பு

    • மர்ம நபர் ஒருவர் இருவரின் மோட்டார் சைக்கிள் மீதும் திடீரென பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தார்.
    • இதில் 2 மோட்டார்சைக்கிளும் முழுவதுமாக எரிந்து சேதமானது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் மணிக்கூண்டு அருகே லலிதா ஓட்டல் சந்து பகுதி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியை சேர்ந்தவர்கள் தங்களது மோட்டார் சைக்கிளை வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைத்திருந்தனர்.

    நேற்று இரவும் வழக்கம் போல் குடியிருப்பு வாசிகள் தங்களது மோட்டார் சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்தி வைத்திருந்தனர்.

    இந்நிலையில் அந்த குடியிருப்பு பகுதியை சேர்ந்த கதிரவன் மற்றும் முனீர் அகமது ஆகியோருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள்அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

    இரவு 11.30 மணி அளவில் அந்த பகுதிக்கு வந்த மர்ம நபர் ஒருவர் இருவரின் மோட்டார் சைக்கிள் மீதும் திடீரென பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தார். இதில் 2 மோட்டார்சைக்கிளும் முழுவதுமாக எரிந்து சேதமானது.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த குடியிருப்பு வாசிகள் இது குறித்து சத்தியமங்கலம் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்த போது அதில் மர்ம நபர் ஒருவர் 2 மோட்டார் சைக்கிளை பெட்ரோல் ஊற்றி எரிப்பது பதிவாயிருந்தது.

    இந்த செயலில் ஈடுபட்டவர் பழைய குற்றவாளியாக இருக்கலாம் என போலீசார் சந்திக்கின்றனர். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×