திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேர் சிறையில் அடைப்பு

ரசூல் மொய்தீன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.பெருந்துறை கோர்ட்டில் ஆஜர் செய்து மாவட்ட சிறையில் அடைத்தனர்.
திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேர் சிறையில் அடைப்பு
Published on

சென்னிமலை:

சென்னிமலை-ஊத்துக்குளி மெயின் ரோடு சிறுக்களஞ்சி அருகில் ரோட்டில் பாதை கருப்ப ணசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் சில மாதத்தி ற்கு முன்பு நள்ளிரவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டுப் போனது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ரசூல் மொய்தீன் (46) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் சென்னை புழல் பகுதியில் தங்கி இருந்ததாகவும், இவர் மீதுள்ள பழைய வழக்கு சம்பந்தமாக கோவைக்கு வந்து சென்றுள்ளார்.

அதன் பின்னர் திருப்பூர் பகுதியில் தங்கியிருந்து அங்கு வேலை செய்து வந்துள்ளார்.

இவர் சென்னிமலை அடுத்துள்ள சிறுக்களஞ்சி கோவிலில் பணம் ரூ.20 ஆயிரத்தை உண்டியலை உடைத்து திருடி சென்றதா கவும், இவரிடம் இருந்து 6 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்ப ட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர் .

மேலும் இவரை கைது செய்து பெருந்துறை கோர்ட்டில் ஆஜர் செய்து மாவட்ட சிறையில் அடைத்தனர்.

மேலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சென்னி மலை அடுத்துள்ள முகாசி ப்பிடாரியூர் பகுதியில் கஸ்தூரி என்பவரது வீட்டில் நான்கு பவுன் தங்க நகை திருட்டு போனது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த திருட்டு வழக்கில் மேட்டூரை சேர்ந்த கனகராஜ் (44) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் இந்த வீட்டில் 4 பவுன் தங்க நகையை திருடி சென்றது போலீசாரின் விசார ணையில் கண்டறியப்பட்டது.

அவரிடம் இருந்து 4 பவுன் தங்க நகை மீட்கப்பட்டது. இவரை போலீசார் கைது செய்து பெருந்துறை கோ ர்ட்டில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com