search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கஞ்சா விற்ற 2 பேர் கைது
    X

    கஞ்சா விற்ற 2 பேர் கைது

    • சட்ட விரோதமாக கஞ்சா விற்றுக்கொண்டிருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • ரூ.12 ஆயிரத்து 500 மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு அக்ரஹாரம் டாஸ்மாக் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ஈரோடு டவுண் போலீசா ருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீ சார் அங்கு சட்ட விரோதமாக கஞ்சா விற்றுக்கொண்டிருந்த மரப்பாளையத்தை சேர்ந்த தனுஷ்கோடி மகன் ஆனந்த் என்ற ஆன ந்தகுமார் (வயது 38),

    வாணி பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த உதயகுமார் மகன் முகேஷ் (22) ஆகியோரை போலீசார் கைது செய்த னர்.

    பின்னர் அவர்கள் வை த்திருந்த ரூ.12 ஆயிரத்து 500 மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவ ர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே போல் ஈரோடு கிரு ஷ்ணம்பாளையம் பகுதியில் போதை பொருள் விற்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ராஜூ மகன் மணிகண்டன் (47) என்ப வரை கருங்கல்பாளையம் போலீசார் பிடித்து விசாரித்தனர்.

    பின்னர் அவரி டமிருந்து போதை பொரு ட்களை போலீசார் பறிமு தல் செய்து செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×