search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    108 திருவிளக்கு பூஜை
    X

    108 திருவிளக்கு பூஜை

    • வேதநாயகி அம்மன் சன்னதி முன்பாக தாமரை வடிவில் யாக குண்டம் அமைத்து உலக நன்மை வேண்டி லலிதா சகஸ்ஸர நாம யாகம் நடந்தது.
    • தொடர்ந்து மாலை வேதநாயகி சன்னதி முன்பாக 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    சித்தோடு:

    ஈரோடு மாவட்டம் பவானியில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.

    சங்கமேஸ்வரர் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு வேதநாயகி அம்மன் சன்னதி முன்பாக தாமரை வடிவில் யாக குண்டம் அமைத்து உலக நன்மை வேண்டி லலிதா சகஸ்ஸர நாம யாகம் நடந்தது. சங்கமேஸ்வரர் கோவில் பாலாஜி சிவம் சிவாச்சாரியார் தலைமை யில் குழுவினர் மூலம் யாகம் நடை பெற்றது.

    இதனைத் தொடர்ந்து வேதநாயகி அம்மன் கோவிலில் உள்ள மூலவர் வேதநாயகி அம்மனுக்கு பெண்கள் 1008 பால்குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பால்குட அபி ஷேகம் நடைபெற்றது.

    இதில் பவானி, காளிங்க ராயன் பாளையம், குமார பாளையம் உள்பட பலேவறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வேதநாயகி அம்மனை வழிபட்டு சென்றனர்.

    இதனைத் தொடர்ந்து மாலை வேதநாயகி சன்னதி முன்பாக 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பவானி சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஆடி கடைசி வெள்ளி விழா குழுவினர் செய்திருந்தனர்

    Next Story
    ×