search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு. வ.உ.சி. மார்க்கெட்டில் தக்காளி - முருங்கைக்காய் விலை வீழ்ச்சி
    X

    ஈரோடு. வ.உ.சி. மார்க்கெட்டில் தக்காளி - முருங்கைக்காய் விலை வீழ்ச்சி

    • கடந்த மாதம் பனி தாக்கம் காரணமாக காய்கறிகள் வரத்து குறைந்து காணப்பட்டது
    • தக்காளி வரத்து அதிகரித்து உள்ளதால் விலை வீழ்ச்சி அடைந்தது

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு மொத்தம் - சில்லரை விற்பனையில் வியாபாரம் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் பனி தாக்கம் காரணமாக காய்கறிகள் வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் காய்கறிகள் விலையும் அதிகரித்து இருந்தது.

    ஆனால் மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்தே ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்து வருகிறது. இதனால் காய்கறிகள் வரத்தும் அதிகரித்து காய்கறிகள் விலை குறைந்து விட்டது. பொதுவாக ஈரோடு காய்கறி மார்க்கெட்டிற்கு 20 முதல் 25 டன் காய்கறிகள் வரத்தாகி வந்த நிலையில் இன்று 30 டன் காய்கறிகள் வரத்தாகி இருந்தது. இன்று வ.உ.சி. மார்க்கெட்டில் காய்கறிகள் விலை கிலோவில் வருமாறு:-

    கத்தரிக்காய் - 30, வெண்டைக்காய் - 60, பாவக்காய் - 50, புடலங்காய் - 40, பட்ட அவரை - 60, கருப்பு அவரை - 40, முள்ளங்கி - 25, பீர்க்கங்காய்-70, பீட்ரூட்-40, கேரட் - 50, பீன்ஸ் - 70, சவ்சவ்-20, சேனக்கிழங்கு - 50, முட்டைகோஸ் - 20, குடைமிளகா-60, பச்சை மிளகாய் - 60, உருளைக்கிழங்கு -20.

    கடந்த வாரம் 25 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி ஒரு கிலோ இன்று ரூ.10 முதல் 15 -க்கு குறைந்து விட்டது. தக்காளி வரத்து அதிகரித்து உள்ளதால் விலை வீழ்ச்சி அடைந்தது. ஒட்டன்சத்திரம், தாளவாடி, தாராபுரம் போன்ற பகுதிகளில் இருந்து தக்காளிகள் வரத்தாகி இருந்தது. இதேப்போல் முருங்கைக்காய் ஒரு கிலோ 25 ரூபாயாக குறைந்து விட்டது.

    அதே நேரம் வரத்து குறைவு காரணமாக பச்சை பட்டாணி இன்று ஒரு கிலோ 100 ரூபாயாக அதிகரித்து விற்கப்பட்டது. இதேப்போல் கடந்த வாரம் 70 ரூபாய்க்கு விற்கப்பட்ட இஞ்சி இன்று ஒரு கிலோ 140 ரூபாயாக விற்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×