search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில்  தை அமாவாசை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
    X

    ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் தை அமாவாசை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய போது எடுத்த படம்.

    ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் தை அமாவாசை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

    • நூற்றாண்டு பழமை மிக்க ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆடி மற்றும் தை மாதங்களில் அமாவாசை பெருநாள் 11நாட்கள் நாட்கள் மிகவும் சிறப்பாக நடைபெறும்.
    • தை அமாவாசை திருவிழா இன்று காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியின் தொடக்கமாக காலையில் வேள்விகள் செய்யப்பட்டு விநாயகருக்கு பூஜைகள் நடத்தப்பட்டு கொடி பட்டம் அலங்கரிக்கப்பட்டு மூலவரின் சன்னதியை சுற்றி ஊர்வலமாக வந்து கொடியேற்றப்பட்டது.

    ஏரல்:

    நூற்றாண்டு பழமை மிக்க ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆடி மற்றும் தை மாதங்களில் அமாவாசை பெருநாள் 11நாட்கள் நாட்கள் மிகவும் சிறப்பாக நடைபெறும்.

    தை அமாவாசை திருவிழா இன்று காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியின் தொடக்கமாக காலையில் வேள்விகள் செய்யப்பட்டு விநாயகருக்கு பூஜைகள் நடத்தப்பட்டு கொடி பட்டம் அலங்கரிக்கப்பட்டு மூலவரின் சன்னதியை சுற்றி ஊர்வலமாக வந்து கொடியேற்றப்பட்டது.

    நிகழ்ச்சி ஏற்பாட்டினை கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ. கருத்தப்பாண்டிய நாடார் செய்திருந்தார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர்.

    திருவிழா நாட்களில் சுவாமி இரவு வெவ்வேறு அலங்காரத்தில் கோவில் வளாகத்தில் சப்பரத்தில் எழுந்தருளல் காட்சி நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான தை அமாவாசை திருவிழா 21-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. அன்று பகல் 1 மணிக்கு சாமி உருகு பலகை தரிசனம், அபிஷேகம், மாலை 5 மணிக்கு இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்மத்திருக்கோல காட்சி, இரவு 10 மணிக்கு கற்பகபொன் சப்பரத்தில் சிவப்பு சாத்தி தரிசனம் நடக்கிறது. 22-ந் தேதி காலை 5 மணிக்கு வெள்ளை சாத்தி தரிசனம், காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், மதியம் 1.30 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம் நடக்கிறது.

    Next Story
    ×