என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் ஆடி அமாவாசை திருவிழா- 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
- ஆடி அமாவாசை திருவிழா வருகிற 19-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. அன்று காலை 7.30 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது.
- முக்கிய திருவிழா 28-ந் தேதி நடக்கிறது. அன்று பகல் 1 மணிக்கு சாமி உருகுபலையில் கற்பூர விலாசம் வரும் சிறப்பு காட்சியும், அதனை தொடர்ந்து அபிஷேக ஆராதனை நடக்கிறது.
ஏரல்:
ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழா 12 நாட்கள் சிறப்பு நிகழ்ச்சியுடன் நடைபெறும். இந்த திருவிழாவில் தமிழகத்தில் பல்வேறு இடங்களிலிருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழா வருகிற 19-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. அன்று காலை 7.30 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 8 மணிக்கு கேடய சப்பரத்தில் அருணாசலசாமி கோவில் வளாகத்தில் வலம் வருதல், 20-ந் தேதி இரவு 8 மணிக்கு திரு ஆல் வாகனத்தில் குறி சொல்லும் கூத்தன் அலங்காரத்தில் வலம் வருதல், 21-ந் தேதி இரவு 8 மணிக்கு முல்லை சப்பரத்தில் சதாசிவ மூர்த்தி அலங்காரம், 22-ந் தேதி பூங்குயில் சப்பரத்தில் நடராஜர் அலங்காரம், 23-ந் தேதி திருப்புண்ணை சப்பரத்தில் நவநீதகிருஷ்ணன் அலங்காரத்தில் வலம் வருதல், 24-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு ஏக சிம்மாசன சப்பரத்தில் பாலசேமன் அலங்காரம், 25-ந் தேதி திங்கட்கிழமை இரவு 8 மணிக்கு பல்லாக்கில் தவழ்ந்த கிருஷ்ணர் திருக்கோலம், 26-ந் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு வில்வச்சப்பரத்தில் ராஜாங்க அலங்காரம், 27-ந் தேதி புதன்கிழமை இரவு 8 மணிக்கு சின்ன சப்பரத்தில் பிச்சாண்டவ மூர்த்தி திருக்கோலத்தில் கோவில் மற்றும் ஏரல் நகரத்தில் வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
முக்கிய திருவிழா 28-ந் தேதி நடக்கிறது. அன்று பகல் 1 மணிக்கு சாமி உருகுபலையில் கற்பூர விலாசம் வரும் சிறப்பு காட்சியும், அதனை தொடர்ந்து அபிஷேக ஆராதனை, மாலை 5 மணிக்கு இலாமிச்சைவேர் சப்பரத்தில் சேர்மத் திருக்கோலம், இரவு 11 மணிக்கு கற்பகப்பொன் சப்பரத்தில் சாமி எழுந்தருளல் காட்சி நடைபெறுகிறது. 29-ந் தேதி காலை 4 மணிக்கு வெள்ளை சாத்தி தரிசனம், காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், பகல் 1 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம், மாலை 6 மணிக்கு ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோவில் பந்தலில் தாகசாந்தி, இரவு 10.30 மணிக்கு கோவில் மூலஸ்தானம் வந்து சேரும் ஆனந்த காட்சி திருக்கற்பூர தீப தரிசனம் நடைபெறுகிறது.
30-ந் தேதி காலை 8 மணிக்கு தீர்த்தவாரி பொருனை நதியில் சகல நோய் தீரும் திருத்துறையில் நீராடல், பகல் 12.30 மணிக்கு அன்னதானம், பகல் 3 மணிக்கு ஆலிலைச் சயன அலங்காரம், மாலை 6 மணிக்கு ஊஞ்சல் சேவை, இரவு 9 மணிக்கு திருவருள் புரியும் மங்கல தரிசனம் நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ. கருத்தப்பாண்டிய நாடார் செய்து வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்