search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்பனா சாவ்லா விருது பெற தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்-தென்காசி மாவட்ட கலெக்டர் தகவல்
    X

    கல்பனா சாவ்லா விருது பெற தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்-தென்காசி மாவட்ட கலெக்டர் தகவல்

    • விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற 30-ந் தேதி ஆகும்.
    • உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ள தாவது:-

    துணிவு மற்றும் வீர சாகசச் செயல்களுக்கான "கல்பனா சாவ்லா விருது" ஒவ்வொரு ஆண்டும் முதல்- அமைச்சரால் சுதந்திர தின விழாவின் போது வழங்கப்படுகிறது. இந்த விருதில், ரூ.5 லட்சத்திற்கான வரைவு காசோலை, சான்றிதழ் மற்றும் பதக்கம் அடங்கும். தமிழ்நாட்டை சேர்ந்த, துணிச்சலான மற்றும் வீர சாகச செயல் புரிந்த பெண் விண்ணப்ப தாரர் மட்டுமே இவ்விருதினைப் பெறத் தகுதியுள்ளவர் ஆவர்.

    இந்த விருதுக்கு தென்காசி மாவட்டத்தை சார்ந்த துணிவு மற்றும் வீர சாகசச் செயல்களுக்கான வர்களுக்கான பரிந்துரைகள் கோரப்படுகின்றன.

    துணிவு மற்றும் வீர சாகசச் செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருது க்கான விண்ணப்பங்கள் / பரிந்து ரைகள் இந்த நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே பெறப்படும். கல்பனா சாவ்லா விருதுக்கான விண்ணப்பங்கள் / பரிந்துரைகள் இணைய தளத்தில் அதற்கென உள்ள படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை உள்ளடக்கி யதாகவும், விருதுக்காக பரிந்துரைக்கப்படும் நபர்களின் துணிவு மற்றும் வீர சாகசச் செயல்களைப் பற்றி எடுத்துரைக்கும் தகுதியுரை (அதிகப்ட்சம் 800 வார்த்தை களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்) தெளிவாகவும், தேவையான அனைத்து விவர ங்களும் முறையாக நிரப்பப்படு வதை உறுதி செய்ய வேண்டும்.

    விருதுக்கு விண்ணப்பி ப்பதற்கான கடைசி நாள் வருகிற 30-ந் தேதி ஆகும். இணைய தளத்தில் பெற ப்படும் விண்ணப்பங்கள்/பரிந்துரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்ப ங்கள் கண்டி ப்பாக நிராகரிக்கப்படும். பதக்கம் பெறத் தகுதியுள்ளவர்கள், அரசால் நியமிக்கப்பட்ட தேர்வு குழுவால் தெரிவு செய்யப்படுவர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×