search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை வரதய்யங்கார்பாளையம் ஆதிமூலப்பதி அய்யா வைகுண்ட சிவபதியில் தேர்த்திருவிழா
    X

    கோவை வரதய்யங்கார்பாளையம் ஆதிமூலப்பதி அய்யா வைகுண்ட சிவபதியில் தேர்த்திருவிழா

    • 191-வது வைகுண்டர் ஆண்டு 24-வது தேர்த்திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து தொடங்கி வைக்கிறார்.

    கோவை,

    கோவை அருகே வரதய்யங்கார்பாளையத்தில் ஆதிமூலப்பதி அய்யா வைகுண்ட சிவபதி உள்ளது. இங்கு 191-வது வைகுண்டர் ஆண்டு 24-வது தேர்த்திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    அன்று காலை 6.30 மணிக்கு நாதஸ்வர வாத்தியம், செண்டை வாத்தியம் முழங்க சிறப்பு பணிவிடையுடன் கொடியேற்றம் நடக்கிறது. அதைத் தொடர்ந்து உகப்படிப்பு, அன்னதர்மம், உச்சிபடிப்பு, பணிவிடை, திருஏடு வாசிப்பு, இரவு 7.30 மணிக்கு அய்யா தொட்டியில் வாகனத்தில் எழுந்தருளி பதிவலம் வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    23-ந் தேதி காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை உகப்படிப்பு, அன்னதர்மம், உச்சிப்படிப்பு, ஏடுவாசிப்பு, இரவு 7.30 மணிக்கு அய்யா மயில் வாகனத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சிகள் நடக்கிறது. 24-ந் தேதி இரவு 8 மணிக்கு அன்னவாகனம், 25-ந் தேதி இரவு 7.30 மணிக்கு தொட்டில் வாகனம், 26-ந் தேதி இரவு 7.30 மணிக்கு பூஞ்சரப்ப வாகனம், 27-ந் தேதி சர்ப்ப வாகனம், 28-ந் தேதி இரவு 8.30 மணிக்கு கருடவாகனம் ஆகிய வாகனங்களில் அய்யா எழுந்தருளி பதிவலம் வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    29-ந் தேதி இரவு 7.30 மணிக்கு அய்யா வெள்ளைக் குதிரை வாகனம் 30-ந் தேதி இரவு 9.30 மணிக்கு ஆஞ்சநேயர் வாகனம், அடுத்த மாதம் (அக்டோபர் 1-ந் தேதி) இரவு இந்திர வாகனத்தில் அய்யா எழுந்தருளி பதிவலம் வருதல் நடைபெறுகிறது.

    2-ந் தேதி மதியம் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து தொடங்கி வைக்கிறார்.

    Next Story
    ×