search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டிவனம் அருகே அரசு பஸ் மோதி மனைவி கண்முன் முதியவர் பலி
    X

    திண்டிவனம் அருகே அரசு பஸ் மோதி மனைவி கண்முன் முதியவர் பலி

    • மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு சென்றனர்.
    • திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்:

    புதுவை நகர பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 65). இவரது மனைவி அம்பிகா (60). இருவரும் மோட்டார் சைக்கிளில் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு சென்றனர். அப்போது திண்டிவனம் அடுத்த தீவனூர் அருகே சென்றபோது, சாலையில் இருந்த விநாயகர் கோவிலை கண்டனர். அங்கு சென்று சாமி கும்பிட மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சாலையை கடந்தனர்.

    அப்போது திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பஸ் இவர்கள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த வெங்கடாசலம், மனைவி கண்முன்னே துடி துடித்து உயிரிழந்தார். லேசான காயங்களுடன் உயிர்தப்பிய அம்பிகாவை, அவ்வழியே சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த ரோசனை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வெங்கடாசலத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×