search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி
    X

    பண்ருட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி

    • பண்ருட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலியானார்.
    • இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த அங்கு செட்டி பாளையம்- சேலம் மெயின் ரோட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 65), இவர் இன்று அதிகாலை 2 மணி அளவில் அங்குசெட்டி பாளையம் சிற்றரசு அலுவலகம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலையில் அடிபட்டு கிடந்தார்.அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×