search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வால்பாறை அருகே காட்டெருமை தாக்கி முதியவர் சாவு
    X

    வால்பாறை அருகே காட்டெருமை தாக்கி முதியவர் சாவு

    • ஆவேசத்துடன் தாக்கி தூக்கி வீசியது
    • வனத்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை

    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அதிலும் காட்டு யானைகள், சிறுத்தை, கரடி, காட்டெருமை ஆகியை அடிக்கடி வனத்தில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது,

    வால்பாறை அருகே ரயான் எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன் (வயது 65). இவர் சம்பவத்தன்று மாலை பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்றார்.

    அப்போது தேயிலை தோட்டத்துக்குள் பதுங்கி இருந்த காட்டெருமை ஆவேசத்துடன் தாக்கி தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த செல்லப்பன் சம்பவ இடத்தில் பரிதாபமாக பலியானார்.இதுகுறித்து தகவலறிந்ததும் வால்பாறை போலீசார் மற்றும் மானாம்பள்ளி வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் செல்லப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்க வேண்டுமென வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×