search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பின் தங்கிய மாவட்டங்களில் பனியன் தொழிலை விரிவாக்கம் செய்ய முயற்சி
    X

    பின் தங்கிய மாவட்டங்களில் பனியன் தொழிலை விரிவாக்கம் செய்ய முயற்சி

    • பயிற்சி பெற்ற தொழிலாளரை கொண்ட தொழில் முனைவோரையும் உருவாக்கி வருகின்றனர்.
    • வெளிமாவட்டங்களை சேர்ந்த தொழில் முனைவோருக்கு முதலில் பயிற்சி அளிக்கிறது.

    திருப்பூர் :

    சிறந்த உட்கட்டமைப்பு வசதி, திறன்வாய்ந்த தொழிலாளர்களால் குறைந்த செலவில் சர்வதேச தரத்துடன் உற்பத்தி செய்யும் யூனிட்களை உருவாக்க தொழில் முனைவோருக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறது தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைப்பு (ஐ சீடு). இந்த அமைப்பு திருப்பூர் பனியன் தொழிலை, பின்தங்கிய மாவட்டங்களில் விரிவாக்கம் செய்ய தகுந்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

    வேலைவாய்ப்பு குறைந்த பின்தங்கிய மாவட்டங்களில் பனியன் உற்பத்தி யூனிட்களை உருவாக்கி, பயிற்சி பெற்ற தொழிலாளரை கொண்ட தொழில் முனைவோரையும் உருவாக்கி வருகின்றனர்.

    இந்நிறுவனம் வெளிமாவட்டங்களை சேர்ந்த தொழில் முனைவோருக்கு முதலில் பயிற்சி அளிக்கிறது. தகுதியான நிதி ஆதார திட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. கடந்த, ஏப்ரல் - மே மாதங்களில், தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்பட்டது.

    அதன்படி புதிய யூனிட்கள் மதுரை - தத்தனேரி, உசிலம்பட்டி, கல்லுப்பட்டி, விருதுநகர் - ராஜபாளையம் பகுதிகளில் திறக்கப்பட்டுள்ளன. திருப்பூரில் உள்ள பனியன் உற்பத்தி நிறுவனங்கள் ஆடை உற்பத்தி மற்றும் பேக்கிங் ஆர்டர்களை அவர்களுக்கு வழங்கியுள்ளன.

    குறித்த நேரத்தில் கட்டிங் துணிகளை இணைத்து ஆடைகளாக உருவாக்கி தகுந்த முறையில் பேக்கிங் செய்தும் அனுப்பி வருகின்றன. இதன்மூலமாக 60க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்றுவருகின்றனர்.

    Next Story
    ×