search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கனமழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்தன
    X

    வயலில் சாய்ந்து கிடக்கும் நெற்பயிர்கள்.

    கனமழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்தன

    • சில நாட்களில் அறுவடை செய்ய வேண்டிய பருவத்தில் நெற்பயிர்கள் இருந்தது.
    • நெற்கதிர்களை எந்திரங்கள் மூலம் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகா, சாலியமங்கலம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குறுவை பருவத்தில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் பல இடங்களில் சில நாட்களில் அறுவடை செய்ய வேண்டிய பருவத்தில் நெற்பயிர்கள் இருந்தது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் நெற்பயிர்கள் வயலிலேயே சாய்ந்து மழைநீரில் மூழ்கும் அபாய நிலை உள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்படும் என விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கி ன்றனர். வயலில் உள்ள நெற்கதிர்கள் சாய்ந்த நிலையில் உள்ளது.

    மேலும் வயலில் தொடர்ச்சியாக மழை பெய்யும் சூழ்நிலை உள்ளதால் சாய்ந்த நெற்பயிர்களை காப்பாற்ற மழைநீரை வடிய வைத்து நெற்கதிர்களை எந்திரங்கள் மூலம் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×