search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மருத்துவ சான்று வழங்க காலதாமதம் ஆவதால் - கைதியை கோர்ட்டில் ஆஜர்படுத்த முடியாமல் தவிக்கும் போலீசார்
    X

    மருத்துவ சான்றுக்காக குற்றவாளியுடன் காத்திருக்கும் போலீசார்.

    மருத்துவ சான்று வழங்க காலதாமதம் ஆவதால் - கைதியை கோர்ட்டில் ஆஜர்படுத்த முடியாமல் தவிக்கும் போலீசார்

    • மருத்துவரின் அலட்சியப்போக்கால் கைதியை கோர்ட்டில் ஆஜர்படுத்த முடியாமல் காவலர்கள் தவித்து வருகின்றனர்.
    • விரைவாக மருத்துவ சான்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசார் வலியுறுத்தி உள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் கஞ்சா வழக்கில் பதிவு செய்யப்பட்ட குற்றவாளியை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவச் சான்று வாங்க போலீசார் சென்றனர்.

    ஆனால் இதுவரை மருத்துவ சான்று வழங்கப்படவில்லை. மருத்துவரின் அலட்சியப்போக்கால் கைதியை கோர்ட்டில் ஆஜர்படுத்த முடியாமல் காவலர்கள் தவித்து வருகின்றனர். ஒரு கைதியை நீதிமன்றத்தில் 24 மணி நேரத்திற்குள் ஆஜர்படுத்த வேண்டும்.ஆனால் மருத்துவமனையில் மருத்துவ சான்று வழங்குவதில் காலதாமதம் ஆவதால் ஆஜர்படுத்த முடியாமல் தவித்து வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

    எனவே விரைவாக மருத்துவ சான்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசார் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×