search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் களக்காடு, கூடங்குளம் பகுதிகளில் நாளை மின்தடை
    X

    மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் களக்காடு, கூடங்குளம் பகுதிகளில் நாளை மின்தடை

    • வள்ளியூர் கோட்டத்திற்குட்பட்ட துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நடுக்கல்லூர், பழவூர், கருங்காடு பகுதிகளில் நாளை மதியம் 2 மணி வரை மின் தடை ஏற்படும்

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் வள்ளியூர் பகுதி வினியோகப் பிரிவு செயற் பொறியாளர் வளன் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாளை (திங்கட்கிழமை) வள்ளியூர் கோட்டத்திற் குட்பட்ட சங்கனாங்குளம், களக்காடு, கூடங்குளம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே சங்கனாங்குளம் துணை மின் நிலையத்திற்குட் பட்ட மன்னார்புரம், வடக்கு விஜயநாராயணம், தெற்கு விஜயநாராயணம், இட்டமொழி, நம்பிக்குறிச்சி, தெற்கு ஏறாந்தை, சிவந்தியாபுரம், பரப்பாடி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இதே போல களக்காடு துணை மின் நிலையத்திற்குட்பட்ட கோதைசேரி, சிங்கி குளம், களக்காடு, காடு வெட்டி, வடமலை சமுத்திரம், கள்ளிகுளம், மீனவன் குளம், கருவேலன் குளம், கோவில்லம்மாள் புரம் மற்றும் பக்கத்து கிராமங் களில் மின் வினியோகம் இருக்காது.

    மேலும் கூடங்குளம் துணை மின் நிலையத்திற் குட்பட்ட கூடங்குளம், இடிந்தகரை, இருக்கன்துறை, பொன்னார்குளம், விஜயா பதி, ஆவுடையாள்புரம், தோமையார்புரம், சங்கனேரி, வைராவி கிணறு, தாமஸ் மண்டபம் பகுதிகளிலும் மினி வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கல்லிடைக்குறிச்சி

    கல்லிடைக்குறிச்சி மின் வினியோகம் பிரிவு செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (திங்கட்கிழமை) மேலக்கல்லூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட மேலக்கல்லூர், சுத்தமல்லி, சங்கன்திரடு, கொண்டா நகரம், நடுக்கல்லூர், பழவூர், கருங்காடு, திருப்பணி கரிசல்குளம், துலுக் கர்குளம், வெள்ளாங்குளம் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் தடைபடும் என கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×