search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி டிரைவர் படுகாயம்
    X

    பாவூர்சத்திரத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி டிரைவர் படுகாயம்

    • மாப்பிள்ளையூரணி பகுதியை சேர்ந்த சண்முகவேல் தனது காரில் கேரளாவில் உள்ள தனது உறவினரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஊர் திரும்பி வந்து கொண்டிருந்தார்.
    • அப்போது பாவூர்சத்திரம் கே.டி.சி. நகர் அருகே வந்து கொண்டிருந்தபோது சக்திவேலின் மோட்டார் சைக்கிள் மீது அதிவேகமாக மோதி தூக்கி வீசியது.

    தென்காசி:

    நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலையில் பாவூர்சத்திரம் அருகே கே.டி.சி. நகர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பெட்ரோல் பங்க் அருகே செட்டியூர் கிராமத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவரான சக்திவேல் என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் நிரப்புவதற்காக நண்பருடன் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்குள்ள சாலையில் திரும்பும்போது தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி பகுதியை சேர்ந்த சண்முகவேல் என்பவர் தனது காரில் கேரளாவில் உள்ள தனது உறவினரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஊர் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    அப்போது பாவூர்சத்திரம் கே.டி.சி. நகர் அருகே வந்து கொண்டிருந்தபோது சக்திவேலின் மோட்டார் சைக்கிள் மீது அதிவேகமாக மோதி தூக்கி வீசியது. இதில் சக்திவேல் கால் முறிந்து பலத்த காயத்துக்குள்ளானார். மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்த அவரது நண்பர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

    சக்திவேலை அங்கிருந்த நபர்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய பதை பதைக்க வைக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×