என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![பொள்ளாச்சி அருகே செல்போனில் இரங்கல் ஸ்டேட்டஸ் வைத்து தற்கொலை செய்த டிரைவர் பொள்ளாச்சி அருகே செல்போனில் இரங்கல் ஸ்டேட்டஸ் வைத்து தற்கொலை செய்த டிரைவர்](https://media.maalaimalar.com/h-upload/2023/09/09/1947088-sucide-1.webp)
பொள்ளாச்சி அருகே செல்போனில் இரங்கல் ஸ்டேட்டஸ் வைத்து தற்கொலை செய்த டிரைவர்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கண்டக்டருக்கு வீடியோகாலில் பேசி தூக்கு கயிறுடன் சாகப்போவதாக கூறினார்
- ஓட்ைட பிரித்து உள்ளே சென்று சடலம் மீட்பு
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பொன்னாச்சியூரை சேர்ந்தவர் சிவராஜ். இவரது மகன் சண்முக சுந்தரம் (வயது 28). இவர் நாச்சிபாளையம் - உக்கடம் வரை செல்லும் தனியார் பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். சண்முகசுந்தரம் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
இவர் தனது நண்பர்களிடம் அடிக்கடி தற்கொலை செய்யப்போவதாக கூறி வந்தார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த சண்முகசுந்தரம் தற்கொலை செய்வது என முடிவு செய்தார்.
தற்கொலை செய்வதற்கு முன்பு அவரது நண்பரான கண்டக்டருக்கு வீடியோ அழைப்பு மூலமாக தொடர்பு கொண்டு தற்கொலை செய்யப்போவதாக தூக்கு கயிற்றுடன் பேசினார். மேலும் அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு அவருடைய ஸ்டேட்டசில் புகைப்படத்தை வைத்து ரிப் என இரங்கல் பதிவு செய்து விட்டார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக அவரது வீட்டுக்கு சென்று கதவை தட்டினர். ஆனால் யாரும் கதவை திறக்க வில்லை. பின்னர் ஓட்ைட பிரித்து உள்ளே சென்று பார்த்த போது சண்முக சுந்தரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதுகுறித்து கோட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் தற்கொலை செய்து கொண்ட சண்முக சுந்தரத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)