search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடும்ப தகராறில் விஷம் குடித்து டிரைவர் தற்கொலை
    X

    குடும்ப தகராறில் விஷம் குடித்து டிரைவர் தற்கொலை

    • மீண்டும் தகராறு ஏற்பட்டதால் விரக்தியில் இருந்த ராஜ்குமார் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார்.
    • சிகிச்சை பெற்று வந்த ராஜகுமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    காரிமங்கலம், மே.19-

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே தும்பலஅள்ளி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (37). லாரி டிரைவர். இவரது மனைவி சிந்தினி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டதால் விரக்தியில் இருந்த ராஜ்குமார் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார்.

    உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜகுமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×