search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலக்கோடு, மாரண்டஅள்ளி பகுதியில் 4 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம்
    X

    பாலக்கோடு, மாரண்டஅள்ளி பகுதியில் 4 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம்

    • வரும் 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை 4 தினங்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் வழங்க இயலாது.
    • உள்ளூர் நீராதரங்களை பயன்படுத்தி கொள்ளவும் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் வேண்டி கேட்டு கொள்ளபடுகிறது.

    தருமபுரி,

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், கிருஷ்ணகிரி கோட்டத்தின் மூலம் பராமரித்து வரும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு ஒன்றியத்தில் 32 கிராம பஞ்சாயத்துகள் மற்றும் மாரண்டஅள்ளி நகர பஞ்சாயத்துகளுக்கு தினசரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    தேசிய நெடுஞ்சாலை துறை மூலமாக தருமபுரி ராயக்கோட்டை புதியச்சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவதால் தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் பராமரிப்பில் உள்ள ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்கும் பணி நடைபெறகிறது. இதனால் வரும் 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை 4 தினங்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் வழங்க இயலாது.

    எனவே, பயன்படுத்தி மேற்கண்ட 4 தினங்களுக்கு உள்ளூர் நீராதரங்களை பயன்படுத்தி கொள்ளவும் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் வேண்டி கேட்டு கொள்ளபடுகிறது. இவ்வாறு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் நிர்வாக பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×