search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
    X

    வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

    • மழை காலங்களில் வடிகால் வாய்க்கால் வழியாக தண்ணீர் வடிந்து விடும்.
    • தற்போது வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தெற்குகாடு கிராம கமிட்டியை சேர்ந்த மக்கள் முத்துப்பேட்டை தாசில்தார் மகேஷ்குமாரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    முத்துப்பேட்டை பாமணி ஆறு உடைப்பு ஏற்பட்டகாலங்களிலும் மற்றும் மழை வெள்ளம் ஏற்பட்ட காலங்களிலும் முத்துப்பேட்டை சில்லாடி வழி பட்டறைக்குளம் வடிகால் வாய்க்கால் என்று அழைக்கப்படும் வடிகால் வாய்க்கால் வழியாக தண்ணீர் பட்டறைக்குளம் சென்று அங்கிருந்து கோறையாற்றில் தண்ணீர் வடிந்து விடும்.

    தற்போது அந்த வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். எனவே சில்லடி வாய்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×