search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நல்லழகு பாலிடெக்னிக் கல்லூரியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழா
    X

    நல்லழகு பாலிடெக்னிக் கல்லூரியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழா

    • சிறப்பு விருந்தினராக இந்திய நாடார்கள் பேரமைப்பு தலைவர் ராகம் சவுந்திர பாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
    • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    சென்னை:

    சென்னையை அடுத்த புழலில் ஸ்ரீ நல்லழகு நாடார் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும் இணைந்து பள்ளி வளாகத்தில் பத்மஸ்ரீ டாக்டர்.பா. சிவந்தி ஆதித்தனாரின் 88 - வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    சென்னை வாழ் நாடார்கள் சங்க துணை தலைவர் கரு.சி. சின்னத்துரை நாடார் தலைமையில் டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக பாலிடெக்னிக் கல்லூரியின் செயலரும் பள்ளியின் நிர்வாக அதிகாரியுமான எஸ். கோவிந்தசாமி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக இந்திய நாடார்கள் பேரமைப்பு தலைவர் ராகம் சவுந்திர பாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    விழாவில் சென்னை வாழ் நாடார்கள் சங்கத்தின் செயலாளர்கள் செல்லத்துரை, எல். சி. மனோகரன், பாலிடெக்னிக் கமிட்டி உறுப்பினர்கள் எஸ். எஸ். பாண்டியன், நாகராஜன், செல்வகுமார், அட்மிஷன் கமிட்டி உறுப்பினர் சிவாஜி, புழல் சங்கம், செங்குன்றம் வட்டார நாடார் ஐக்கிய சங்கம், செங்குன்றம் வட்டார நாடார் இளைஞர் அணி, காந்தி நகர் நாடார் சங்கம், செங்குன்றம் சுற்று வட்டார நாடார்கள் முன்னேற்ற சங்கம், சூளைமேடு நாடார் சங்கம் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், கல்லூரி மற்றும் பள்ளியின் அனைத்து ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப்போட்டி, கவிதை போட்டி மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    Next Story
    ×