search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கம்பி வேலியில் சிக்கிய நாய் உயிருடன் மீட்பு
    X

    நாயை மீட்ட தீயணைப்பு வீரர்கள்.

    கம்பி வேலியில் சிக்கிய நாய் உயிருடன் மீட்பு

    • வேலியில் சிக்கிய நாய் பயத்தில் யாரையும் அருகில் வரவிடாமல் குரைத்துக்கொண்டே இருந்தது.
    • தீயணைப்பு வீரர்கள் தீவிர முயற்சிக்கு பின் நாயை கம்பி வேலியில் இருந்து பத்திரமாக மீட்டனர்.

    நெல்லை

    நெல்லை சுத்தமல்லி அருகே உள்ள சீனிவாசர் நகர் பகுதியில் காலி மனைக்காக அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலியில் நேற்று வளர்ப்பு நாய் ஒன்று சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடியது.

    இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்த ரிச் ஹவுசிங் சேர்மன் கண்ணன் மற்றும் பேட்டை காமராஜர் பள்ளி ஆசிரியர் பொன்னுசாமி ஆகியோர் நாயை மீட்க முயற்சி செய்தனர். நாய் பயத்தில் அவர்களை அருகில் வரவிடாமல் குரைத்துக்கொண்டே இருந்தது.

    இதுகுறித்து ரிச் ஹவுசிங் கண்ணன் பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அங்கு விரைந்த முருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மைக்கேல்ராஜ், சந்தர், ஆறுமுகம், தங்கராஜா, செல்வரத்தினம், இசக்கி ஆகியோர் கம்பி வேலியில் சிக்கிய நாயை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    தீவிர முயற்சிக்கு பின் நாயை கம்பி வேலியில் இருந்து பத்திரமாக மீட்டனர்.

    Next Story
    ×