search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. பிரமுகர் தந்தை கொலை பஞ்சாயத்து தலைவியின் கணவரிடம் விசாரணை: தனிப்படை போலீசார் தீவிரம்
    X

    தி.மு.க. பிரமுகர் தந்தை கொலை பஞ்சாயத்து தலைவியின் கணவரிடம் விசாரணை: தனிப்படை போலீசார் தீவிரம்

    • ராமு நேற்று காலை மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
    • கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே தி.மு.க.பிரமுகர் தந்தை கொலை யில் பஞ்சாயத்து தலைவியின் கணவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி எல்.என்புரம் சென்னை சாலை யைசேர்ந்தவர் கவர்னர் என்ற ராமு (69).இவர் அதே பகுதியில் சைக்கிள் பழுது பார்க்கும் கடைவைத்திருந்தார். இவருக்கு புருஷோத்தமன், பிரபாகரன், மகாலிங்கம் ஆகிய 3 மகன்மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவருடன் இவரது மகன் புருஷோத்தமன், மருமகள் ஆகியோர் வசித்து வந்தனர். புருஷோத்தமன் தி.மு.க ஒன்றிய பிரதிநிதியாக இருந்து வருகிறார் .வழக்கம்போல நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு படுத்திருந்த ராமு நேற்று காலை இவரது வீட்டின் பின்புறம் தோட்டத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    இது பற்றி பண்ருட்டிபோலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, இன்ஸ்பெக்டர்கள் பண்ருட்டி கண்ணன்,காடாம்புலியூர் ராஜ தாமரை பாண்டியன், நெல்லிக்குப்பம் சீனிவாசன், புதுப்பேட்டை நந்தகுமார், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன் மற்றும் ஏராளமான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொலையான ராமுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை க்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் எல்.என்.புரம் பஞ்சாயத்து தலைவியின் கணவரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். நேற்று இரவு முழுவதும் அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.

    ராமு வீடு குட்டை புறம் போக்கு நிலத்தில் உள்ளது. எனவே ராமுவிற்கும் பஞ்சாயத்து தலைவரின் கணவருக்கும் இது தொடர்பாக முன் விரோதம் இருந்து அதன் காரணமாக ராமு கொலை செய்யப்பட்டாரா என்ற கோணங்களில் போலீசார் விசாரணையை முடக்கி விட்டுள்ளனர். கொலை நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்து அதில் பதிவான காட்சிகளை வைத்தும் விசாரணை நடத்த முடிவு செய்தனர். ஆனால் அப் பகுதியில் உள்ள பெரும்பாலான கண்காணிப்பு கேமிராக்கள் செயல்படாமல் உள்ளது தெரிய வந்தது. இதனால் போலீசார் கொலையாளிகளை கண்டு பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

    Next Story
    ×