search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான வீ.கே.புதூர் அரசு பள்ளி ஆசிரியைக்கு தி.மு.க.வினர் நேரில் வாழ்த்து
    X

    தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான ஆசிரியை மாலதியை பாராட்டி தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், ராஜா எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் கோப்பை வழங்கியபோது எடுத்த படம்.

    தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான வீ.கே.புதூர் அரசு பள்ளி ஆசிரியைக்கு தி.மு.க.வினர் நேரில் வாழ்த்து

    • ஆசிரியை மாலதியை தி.மு.க.வினர் பொன்னாடை அணிவித்து பாராட்டினர்.
    • ராஜா எம்.எல்.ஏ., மற்றும் தி.மு.க.வினர் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான தென்காசி மாவட்டம் வீ.கே.புதூர் அரசு பள்ளியின் ஆசிரியை மாலதியை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் தி.மு.க.வினர் நேரில் சென்று பொன்னாடை அணிவித்து கோப்பை வழங்கி பாராட்டினர்.

    நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், மாநில சுற்றுச்சூழல் அணி தலைவர் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா, முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் மற்றும் மகளிரணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்ட னர்.

    Next Story
    ×