search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. அரசை கண்டித்து  தருமபுரியில் அ.தி.மு.க. சார்பில் ஆா்ப்பாட்டம்
    X

    தி.மு.க. அரசை கண்டித்து தருமபுரியில் அ.தி.மு.க. சார்பில் ஆா்ப்பாட்டம்

    • 10 பேரூராட்சிகளில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
    • கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார்.

    தருமபுரி,

    தி.மு.க. ஆட்சியில் சொத்துவரி, மின்கட்டண உயர்வு ,பால் விலை உயர்வு ,சட்டம் ஒழுங்கு சீர்கெடு உள்ளிட்டவைகளை கண்டித்து தருமபுாி மாவட்டம் முழுவதும் 10 பேரூராட்சிகளில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

    அதன்படி தருமபுரி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளா் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார்.

    இதில் அ.தி மு க நிர்வாகிகள் பாப்பிரெட்டிபட்டி எம்.எல்.ஏ. கோவிந்தசாமி, அரூர் சம்பத்குமார், தருமபுரி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல், தருமபுரி நகர செயலாளர் பூக்கடை ரவி, நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் என்.ஜி.எஸ். சிவப்பிரகாசம், உள்ளிட்ட ஏரளாமானோர் கலந்து கொண்டு தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினா்.

    பின்னா் பேசிய கே.பி.அன்பழகன் தி.மு.க. அரசு பொறுப்பேற்றதிலிருந்து சொத்து வாிஉயர்வு. மின்கட்டண உயா்வு, பால் விலை உயா்வு என அடிமட்ட மக்களின் வாழ்வதாரம் பாதிக்கும் வகையில் உள்ளது என்றும் உடனடியாக இவற்றை அரசு திரும்ப பெறவேண்டும் என பேசினாா்.

    Next Story
    ×