search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் உப்பு மூடை சுமை தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் - மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்
    X

    தூத்துக்குடியில் உப்பு மூடை சுமை தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் - மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்

    • என்.பெரியசாமி பொதுச்செயலாளராக இருந்தபொழுது சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்காக இத்திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
    • ஒவ்வொரு ஆண்டும் உங்களது கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றி கொடுத்து அரசின் சார்பில் வழங்கப்படும் நலத்திட்டங்களும் உங்களுக்கு பெற்று வழங்கப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியின் அடை யாளமும், பிரதான தொழிலுமான உப்பளத் தொழிலில் ஈடுபட்டுள்ள தூத்துக்குடி தன்பாடு உப்பு மூடை சுமை தொழி லாளர்கள், முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் தாங்கள் சங்கத்தில் சேமித்த பணத்தை சங்கத்தின் பொது செயலாளர் என்ற முறையில் அவர்களுக்கு தீபாவளி போனஸாக மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்,

    போல்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது:-

    எனது தந்தை என்.பெரியசாமி பொதுச் செயலாள ராக இருந்த பொழுது சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்காக இத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதனை இன்று வரை எனக்கு முன்பு இருந்த நிர்வாகிகளும், தற்போது நாங்களும் கடை பிடித்து வருகிறோம். ஓவ்வொரு ஆண்டும் கூலி உயர்வு சம்பந்தமாக உப்பள அதிபர்களிடம் சுமூகமாக பேசி பெற்றுக் கொடுத்தது போல எனது தந்தை என். பெரியசாமி வழியிலேயே நானும் ஒவ்வொரு ஆண்டும் உங்களது கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றி கொடுத்து அரசின் சார்பில் வழங்கப்படும் நலத்திட்டங்களும் உங்களுக்கு பெற்று உங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    எனக்கு தி.மு.க.வும், தொழிலாளர்கள் நலனும் இரு கண்கள். அனைவரும் தீபாவளி திருநாளை சிறப்பாக கொண்டாடி மகிழ மனதார வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் சங்க தலைவர் சுப்பிரமணியன், பொருளாளர் ஆறுமுகநயினார், மாவட்ட பொருளாளர் சுசீ ரவீந்திரன், பொது குழு உறுப்பினர் கோட்டுராஜா,செயற்குழு உறுப்பினர் சி.எஸ்.ராஜா, முன்னாள் கவுன்சிலர்கள் ரவீந்திரன், சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஜோஸ்பர், பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×