என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பாளையில் மாவட்ட அளவிலான கலை இலக்கிய திருவிழா-அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- தமிழக அரசு பள்ளிக் கல்விதுறை சார்பில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் சார்பில் மாணவ-மாணவிகளுக்கு கலை இலக்கிய திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.
- மாவட்ட அளவிலான கலை இலக்கிய திருவிழா இன்று பாளை தனியார் பள்ளியில் நடத்தப்பட்டது.
நெல்லை:
தமிழக அரசு பள்ளிக் கல்விதுறை சார்பில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் சார்பில் மாணவ-மாணவி களுக்கு கலை இலக்கிய திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்டத்திலும் மாணவ-மாணவிகளின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கலை இலக்கிய திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி பள்ளிகளுக்குள் கலை இலக்கிய திருவிழாக்கள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து வட்டார அளவில் சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து போட்டிகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் மாவட்ட அளவிலான கலை இலக்கிய திருவிழா இன்று பாளை தனியார் பள்ளியில் நடத்தப்பட்டது.
அதனை அப்துல்வகாப் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இதில் மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கரகாட்டம், நடனம், பாடல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் 6 முதல் பிளஸ்-2 வரையிலான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
இன்று முதல் நாளில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவ ர்களுக்கு நடத்தப்பட்டது. நாளை 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும், நாளை மறுநாள் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கும் போட்டிகள் நடத்தப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்