search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிலக்கோட்டை அருகே ரேஷன் கடையில் பிளாஸ்டிக் அரிசி விநியோகம்? - பொதுமக்கள் பரபரப்பு புகார்
    X

    ரேஷன் கடை விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

    நிலக்கோட்டை அருகே ரேஷன் கடையில் பிளாஸ்டிக் அரிசி விநியோகம்? - பொதுமக்கள் பரபரப்பு புகார்

    • பொதுமக்கள் பிளாஸ்டிக் அரிசி வினியோகம் செய்ததாக எத்திலோடு ரேஷன் கடை முன்பு திரண்டு புகார் அளித்தனர்.
    • இது குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் அல்லது அந்த அரிசியை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே உள்ள எத்திலோடு ரேஷன் கடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பொதுமக்களுக்கு ரேஷன் அரிசி விநியோகம் செய்ய ப்பட்டது. இந்த அரிசியை வாங்கி சென்ற பொதுமக்கள் வீட்டில் அரிசி ஊற வைத்த போது அதில் ஒரு சில அரிசிகள் அப்படியே மேலே மிதந்து வந்தது.

    இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் பிளாஸ்டிக் அரிசி என நினைத்து பதறி எத்திலோடு ரேஷன் கடை முன்பு திரண்டு புகார் அளித்தனர். உடனே அங்கிருந்த விற்பனையாளர் பொதுமக்களிடம் கடந்த 2 மாதங்களாக செறிவு ஊட்டப்பட்ட அரிசி தான் வழங்கப்படுகிறது. இந்த அரிசியை தான் வழங்க ப்பட்டது. அந்த அரிசியில் சற்று கூடுதலான சத்து கிடைப்பதாக மேல் அதிகாரிகள் எங்களிடம் கூறியிருந்தார்கள். ஆகையால் பயப்படாமல் அரிசியை கீழே போடாமல் சாப்பிடலாம் என்று கூறியுள்ளனர் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதனை பொதுமக்கள் ஏற்றுக் கொள்ளாமல் ரேஷன் கடையை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தினர்.

    இதுகுறித்து நிலக்கோ ட்டை வட்ட வழங்கல் அலுவலர் தங்கேஸ்வரியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் பொது மக்களிடம், இதுகுறித்து அரசு தரப்பில் வழங்கப்பட்ட அரிசி தான். அதில் சத்துக்கள் நிறைந்த அரிசியாக விநியோகிக்க ப்பட்டுள்ளது. நிச்சயமாக இது பிளாஸ்டிக் கலந்த அரிசி அல்ல எனக்கூறி சமரசம் செய்தார். இதை த்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இருப்பினும் பொதுமக்கள் மத்தியில் வழங்கப்பட்ட அரிசி தண்ணீரில் மிதப்பதால் பிளாஸ்டிக் அரிசி ஆக இருக்கும் என்ற அச்சத்தில் இருக்கிறார்கள். எனவே இது குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் அல்லது அந்த அரிசியை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×