search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ணை கருவிகள் விநியோகம்
    X

    பண்ணை கருவிகள் தொகுப்பு தார்பாய் மற்றும் பல்வேறு பொருட்கள் விநியோகம் செய்தபோது எடுத்த படம்.

    பண்ணை கருவிகள் விநியோகம்

    • வேளாண்மை-உழவர் நலத்துறையின் மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வேட்டாம் பாடி கிராமத்தில் மானிய விலையில் பண்ணைக் கருவிகள் தொகுப்பு, தார்பாய்கள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது.
    • இரும்புசட்டி, அரிவாள், தார்பாய்கள், மின்கல தெளிப்பான்கள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கினார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் வட்டார வேளாண்மை-உழவர் நலத்துறையின் மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வேட்டாம் பாடி கிராமத்தில் மானிய விலையில் பண்ணைக் கருவிகள் தொகுப்பு, தார்பாய்கள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா முன்னிலை வகித்து வருகைபுரிந்த விவசாயிகளை வரவேற்று திட்டத்தின் நோக்கம் அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தார்.

    அட்மா குழு தலைவர் பழனிவேல் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து வேளா ண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானிய விலையில் வேளாண்மை கருவிகளான கடப்பாரை, மண்வெட்டி, களைக்கொத்து, இரும்புசட்டி, அரிவாள், தார்பாய்கள், மின்கல தெளிப்பான்கள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கினார்.

    முகாமினை வேளாண்மை அலுவலர் மோகன், உதவி வேளாண்மை அலுவலர் கோபிநாத், வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ், உதவி தொழில்நுட்ப மேலாளர் கவிசங்கர் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    Next Story
    ×