பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கல்

புங்கனூரில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம்.பொதுமக்கள் 1000 பேருக்கு தென்னங்கன்றுகள் வீட்டு உபயோக பொருட்கள் என நலத்திட்ட உதவிகள்.
பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
Published on

சீர்காழி:

சீர்காழி தி.மு.க. மேற்கு ஒன்றியம் சார்பாக புங்கனூரில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய பொருளாளர் முஹம்மது இத்ரீஸ் தலைமை வகித்தார்.

மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன் வரவேற்றார். விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ குத்தாலம் கல்யாணம், எம்.எல்.ஏ.க்கள் நிவேதா எம்.முருகன், பன்னீர்செல்வம், தலைமை பேச்சாளர் சேலம் சுஜாதா உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றினர்.

விழாவில் ஒன்றிய செயலாளர்கள் ரவிக்குமார், பஞ்சு குமார், மலர்விழி திருமாவளவன், நகர செயலாளர் சுப்பராயன், சீர்காழி ஒன்றிய பெருந்தலைவர் கமலஜோதி தேவேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முத்து.மகேந்திரன், ஜி.என்.ரவி, மாவட்ட கவுன்சிலர் விஜயேஸ்வரன், மாவட்ட நிர்வாகிகள் முருகன், முத்து குபேரன், செல்வமுத்துக்குமார், தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொருப்பாளர் ஸ்ரீதர், திட்டை ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் 1000 பேருக்கு தென்னை மரக்கன்றுகள் வீட்டு உபயோக பொருட்கள் என நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com