search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காமராஜர் பிறந்தநாளையொட்டி தென்னங்கன்றுகள் வழங்கல்
    X

    தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.

    காமராஜர் பிறந்தநாளையொட்டி தென்னங்கன்றுகள் வழங்கல்

    • சிவசேனா மாநில துணைத்தலைவர் புலவஞ்சி சி. பி. போஸ் தென்னங்கன்றுகளை வழங்கினார்.
    • காமராஜர் பாகுபாடு இன்றி கிராம் மாணவர்களும் மேன்மைப்பட கிராமங்கள்தோறும் 5000 தொடக்கப்பள்ளிகளை தொடங்கியவர்.

    மதுக்கூர்:

    முன்னாள் தமிழக முதல்வர் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு சிவசேனா காவி புலிப்படை, தமிழக இந்து பரிவார் சார்பாக மதுக்கூர் பேருந்து நிலையத்தில் தென்னங்கன்றுகள் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டு அவருடைய ்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

    சிவசேனா மாநில துணைத்தலைவர் புலவஞ்சி சி பி போஸ் தென்னங்கன்றுகளை வழங்கினார். காமராஜர் பாகுபாடு இன்றி கிராம் மாணவர்களும் மேன்மைப்பட கிராமங்கள்தோறும் 5000 தொடக்கப்பள்ளிகளை தொடங்கியவர். அவருடைய அரசியல் பொது வாழ்க்கையில் தூய்மையாக இருந்தவர்.

    அவருடைய காலகட்டங்களிலே இலவசமாக கல்வியை மட்டும் கொடுக்காமல் மதிய உணவு வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்தி கல்வியை கற்க சொன்னவர்.

    இன்று கல்வி வியாபாரம் ரீதியாக செயல்படுகிறது உடனடியாக தனியார் பள்ளிகளில் வசூல் செய்யக்கூடிய அதிக அளவு தொகை குறித்து கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஜாதி அடிப்படையில் கணக்கெடுக்காமல் இந்து மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிட வேண்டும் காமராஜரின் புகழ் என்றும் எப்போதும் அவருடைய கல்வி, ஏழை எளிய மக்களுடைய சார்ந்து அவருடைய நினைவினை போற்றுகிறோம் வணங்குகிறோம்

    Next Story
    ×