search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளை சமாதானபுரத்தில் பயணிகளை ஏற்றுவதில் தகராறு; தனியார் பஸ் கண்ணாடி உடைப்பு - டிரைவர், கண்டக்டர் கைது
    X

    பாளை சமாதானபுரத்தில் பயணிகளை ஏற்றுவதில் தகராறு; தனியார் பஸ் கண்ணாடி உடைப்பு - டிரைவர், கண்டக்டர் கைது

    • சேரன்மகாதேவி, காமராஜர் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் . தனியார் பஸ் டிரைவர்.
    • முத்துவேல், முத்துமாரியப்பன் ஆகிய இருவரும் பிரபாகரனை தகாத வார்த்தையால் பேசி, பஸ்சின் முன்பக்க கண்ணாடியை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    நெல்லை:

    சேரன்மகாதேவி, காமராஜர் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 29). தனியார் பஸ் டிரைவர்.

    தகராறு

    இவர் நேற்று இரவு பாளை சமாதானபுரம் பஸ் நிறுத்தம் பகுதியில் பயணி களை ஏற்றிக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு மற்றொரு தனியார் பஸ் டிரைவரான சேரன்மகா தேவி பட்டன்காடு பகுதியை சேர்ந்த முத்துவேல்(34) மற்றும் அதே பஸ் கண்டக்டரான மேலசெவலை சேர்ந்த முத்துமாரியப்பன்(34) ஆகியோருக்கும் இடையே பயணிகளை ஏற்றுவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் முத்துவேல், முத்துமாரியப்பன் ஆகிய இருவரும் பிரபாகரனை தகாத வார்த்தையால் பேசி, பஸ்சின் முன்பக்க கண்ணாடியை சேதப்படுத்தி யதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் முத்துவேல், முத்துமாரியப்பன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த பாளை சப்-இன்ஸ்பெக்டர் சண்முக மூர்த்தி மற்றும் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

    Next Story
    ×