தூத்துக்குடி தாளமுத்துநகர் மதுபான கடை அருகே தகராறு; வியாபாரி உட்பட 3 பேருக்கு கத்திக்குத்து

தூத்துக்குடி தாளமுத்து நகர் பூப்பாண்டியாபுரத்தை சேர்ந்தவர் அழகுமுத்து ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார்.தாளமுத்து நகர் பகுதியில் உள்ள மதுபான கடை அருகே அமர்ந்து மது அருந்தியுள்ளார்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் மதுபான கடை அருகே தகராறு; வியாபாரி உட்பட 3 பேருக்கு கத்திக்குத்து
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி தாளமுத்து நகர் பூப்பாண்டியாபுரத்தை சேர்ந்தவர் அழகுமுத்து (வயது 40). ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார்.

இவர்அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர்களான பெயிண்டர் மணிகண்டன் (38) தூத்துக்குடி மாநகராட்சி துப்புரவு பணி ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வரும் முருகன் (35) ஆகியோருடன் தாளமுத்து நகர் பகுதியில் உள்ள மதுபான கடை அருகே ஒன்றாய் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.

அப்போது அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த லாரி டிரைவர் தாழையப்பனும் அவர்களுடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார்.

கத்திக்குத்து

அனைவரும் மது போதையில் இருந்த சமயத்தில் அழகுமுத்து தரவேண்டிய பணத்தை தாழையப்பன் கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் தாழையப்பன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அழகு முத்துவை குத்தியுள்ளார்.

இதனை தடுத்த மணிகண்டன் மற்றும் முருகன் ஆகியோருக்கும் கத்திக்குத்து விழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காயம்பட்ட மூவரும் தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் தாளமுத்து நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com