search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கால்நடைகளுக்கு நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்
    X

    முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    கால்நடைகளுக்கு நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்

    • தடுப்பு முறைகள் குறித்து பொதுமக்களிடம் விளக்கி பேசினர்.
    • ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் மோகன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறையினர் செய்திருந்தனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், ஒன்பத்துவேலி ஊராட்சியில் கால்நடைகளுக்கான நோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கால்நடை துறை உதவி இயக்குநர் கண்ணன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். ஒன்பத்துவேலி ஊராட்சி மன்ற தலைவர் விஜயா மதியழகன் கால்நடைகளுக்கான மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார் முகாமில் கால்நடைகளை தாக்கும் நோய்கள் குறித்தும், தடுப்பு முறைகள் குறித்தும் உதவி மருத்துவர்கள் ரகுநாத். சௌந்தரராஜன் ஆகியோர் விளக்கி பேசினர்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணை தலைவர் சிவக்குமார், கால்நடை ஆய்வாளர், உதவியாளர் மற்றும் கால்நடை வளர்ப்போர் பலரும் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் மோகன் மற்றும் கால்நடை பராமரிப்புதுறையினர் செய்து இருந்தனர்.

    Next Story
    ×