search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொசஸ்தலை ஆற்றில் தவறி விழுந்து பலியான வாலிபரின் உடலை பேரிடர் மீட்பு படையினர் மீட்டனர்
    X

    கொசஸ்தலை ஆற்றில் தவறி விழுந்து பலியான வாலிபரின் உடலை பேரிடர் மீட்பு படையினர் மீட்டனர்

    • ஆவடி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் மூன்று நாட்களாக நவீன் குமார் உடலை தேடி வந்தனர்.
    • வாலிபர் விழுந்த இடத்தில் இருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் முட்செடிகளுக்கு இடையே சிக்கி இருந்த உடலை மீட்டனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், வெங்கல் அருகே உள்ள குருவாயல் ஊராட்சியை சேர்ந்த ஆரிக்கம்பட்டு கிராமம், பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்த நவீன்குமார் (வயது20) என்ற வாலிபர் கடந்த புதன்கிழமை மாலை தனது நண்பர்களுடன் ஆரிக்கம்பட்டு கிராமத்தில் உள்ள திருக்கண்டலம் தடுப்பணையின் மேற்பகுதிக்கு சென்று செல்பி எடுத்தபோது திடீரென தவறி கொசஸ்தலை ஆற்று வெள்ள நீரில் விழுந்தார்.

    உடனடியாக வெங்கல் காவல் நிலைய போலீசாருக்கு கிராமமக்கள் தகவல் அளித்தனர். மேலும், ஆவடி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் மூன்று நாட்களாக நவீன் குமார் உடலை தேடி வந்தனர். ட்ரோன் கேமரா, பைபர் படகு உள்ளிட்டவைகளின் உதவிகளுடன் தேடினர்.

    இந்நிலையில், அந்த வாலிபர் விழுந்த இடத்தில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் திருக்கண்டலம் தனியார் செங்கல் தொழிற்சாலைக்கு எதிரே ஆற்றின் நடுவில் முட்செடிகளுக்கு இடையே சிக்கி இருந்த அவரது உடலை மீட்டனர். இதன் பின்னர் வெங்கல் காவல் நிலைய போலீசார் நவீன் குமார் உடலை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×