நிலக்கோட்டையில் வரதட்சணை கொடுமைப்படுத்திய மாற்றுத்திறனாளி கணவர் கைது

50 பவுன் நகை வாங்கி வரச்சொல்லி மனைவியை கணவர் மற்றும் மாமியார் ஆகியோர் கொடுமை ப்படுத்தி வந்துள்ளனர். புகாரின்பேரில் மாற்றுத்திறனாளி கணவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

நிலக்கோட்டை:

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா பட்டிவீரன்பட்டியை சேர்ந்த அங்குச்சாமி மகன் மதன்குமார் (வயது 35). மாற்றுத்திறனாளி. இவருக்கும் தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரையை சேர்ந்த மாணிக்கம் மகள் சசிகலா (30) என்பவருக்கும் கடந்த 2014ம் ஆண்டு பிப்.2ம் தேதி திருமணம் நடந்தது.

திருமணத்தின் போது 5 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை சீர்வரிசையாக வழங்க ப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் 50 பவுன் நகை வாங்கி வரச்சொல்லி சசிகலாவை கணவர் மதன்குமார் மற்றும் மாமியார் அன்னகாமு ஆகியோர் கொடுமை ப்படுத்தி வந்துள்ளனர். இதுகுறித்து நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சசிகலா புகார் அளித்தார்.

அதன் பேரில் இன்ஸ்பெ க்டர் லதா வரதட்சணை கொடுமைப்படுத்திய மதன்குமார் மற்றும் அன்னகாமு ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தார். மதன்குமாரை கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைக்க ப்பட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com