திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசித் திருவிழா

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவில் முளைப்பாரி எடுத்து வந்த பக்தர்கள்.
முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்த பெண்களை படத்தில் காணலாம்
முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்த பெண்களை படத்தில் காணலாம்
Published on

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள், பக்தர்கள் வழிபாடுகள் செய்து வருகின்றனர்.மேலும் மண்டகப்படிதாரர்கள் சார்பாக அம்மன் வீதி உலா, கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.

மஞ்சள் நீர் மண்டகப்படி இன்று நடைபெற்றது. இதையொட்டி காலை 8 மணியளவில் அம்மனுக்கு 16 வகை அபிஷேகம் செய்யப்பட்டு நைவேத்தியங்கள் நடை பெற்றன.இதில் திரளான பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம், முளைப்பாரி எடுத்து வந்தனர்.அதனை தொடர்ந்து அம்மன் 4 ரத வீதி வழியாக கோவிலை வந்தடைந்தது.

அதன் பின்னர் அம்மனுக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 4 ரத வீதி வழியாக அம்மன் உலா வந்து பிரார்த்தனை மண்டபம் வந்தடைந்தது.

அங்கு அம்மனுக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு பிறகு அம்மன் திருக்கோவில் சென்றடைந்தது. அதனை தொடர்ந்து இன்று மாலை கோவில் கலையரங்கத்தில் இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com