search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்திய அறுபடை வீடு முருக பக்தர்கள் பேரவை

    • கடந்த மாதம் 28-ம் தேதி பக்தர்கள் காப்பு கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ஆரணி தமிழர் காலனியில் உள்ள கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணியில் உள்ள தமிழர் காலனியில் அறுபடை வீடு முருக பக்தர்கள் பேரவை சார்பில் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அலகு குத்திக் கொண்டும், வேல் காவடி, பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி எடுத்து கொண்டும், பால் குடங்களை சுமந்து கொண்டும் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று உற்சவருக்கு அபிஷேகம் செய்து வழிபடுவர்.

    அந்த வகையில், கடந்த மாதம் 28-ம் தேதி பக்தர்கள் காப்பு கட்டிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று 31-ம் ஆண்டாக பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இவ்வாறு காப்புக் கட்டிக் கொண்டு விரதம் இருந்த பக்தர்கள் நூற்றுக்கணக்கானோர் சிறுவாபுரி கோவிலுக்கு அலகு குத்திக் கொண்டும், காவடிகளை சுமந்து கொண்டும், பால்குடங்களை சுமந்து கொண்டும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் முருகனுக்கு அரோகரா! கந்தனுக்கு அரோகரா! என்று கோஷம் எழுப்பியவாறு ஊர்வலமாக சென்று வேண்டுதலை நிறைவேற்றினர்.

    மதியம் ஆரணி தமிழர் காலனியில் உள்ள கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், விளக்கு பூஜை மற்றும் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குருசாமிகள் ஜி.மகேந்திரன், இ.ரவி தலைமையில் அறுபடை வீடு முருக பக்தர்கள் பேரவை மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×