search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரம் ஆதீன கலைக்கல்லூரி பவள விழா;
    X

    தருமபுரம் ஆதீன கலைக்கல்லூரியில் நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்தார்.

    தருமபுரம் ஆதீன கலைக்கல்லூரி பவள விழா;

    • ஆதீனத்திற்கு சொந்தமான தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரியின் பவள விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
    • புதிய கலையரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் பழமையான தருமபுரம் ஆதீன மடம் உள்ளது. இதன் அருகிலேயே ஆதீனத்திற்கு சொந்தமான தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரி அமைந்துள்ளது.

    இக்கல்லூரியின் 75-ம் ஆண்டு பவள விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனிடையே கல்லூரியில் கட்டப்பட்டுள்ள புதிய கலையரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை 24-ஆம் தேதி திறந்து வைத்து சிறப்புரயாற்ற உள்ளார்.

    மேலும் ஒலி ,ஒளி தொலைக்காட்சி, வானொலி பதிவகத்தை தொடங்கி வைத்து மற்றும் பவள விழா மலர், திருக்குறள் ஆதீன உரை விளக்க நூல் ஆகியவற்றை வெளியிடுகிறார்.

    இந்தக் கல்லூரியில் வெள்ளி விழா ஆண்டில் அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி பங்கேற்றார். தற்போது பவள விழா ஆண்டில் முதலமைச்சர் கலந்து கொள்வது சிறப்புக்குரியதாகும்.

    இந்த நிலையில் கலையரங்கத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளிடம் விழா ஏற்பாடுகள் குறித்து சிறிது நேரம் கலந்துரையாடினார்.

    இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜகுமார், நிவேதா முருகன் மற்றும் பன்னீர்செல்வம், நகர மன்ற தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தருமபுரம் ஆதீனம் முப்பெரும் விழாவாக நடைபெறும்.

    இந்த நிகழ்வுகளில் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

    Next Story
    ×