search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில்  பாதிரியார்களுக்கு பரிசு தொகுப்பு
    X

    தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பாதிரியார்களுக்கு பரிசு தொகுப்பு

    • கிறிஸ்மஸ் பரிசு தொகுப்பு வழங்கும் விழா சிந்தல்பாடியில் நடைபெற்றது.
    • 60 பாதிரியார்களுக்கு கிருஸ்மஸ் பரிசு தொகுப்பு வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

    மொரப்பூர்,

    தருமபுரி மாவட்டம், மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கிருஸ்துமஸ் விழாவையொட்டி பாதிரியார்களுக்கு கிறிஸ்மஸ் பரிசு தொகுப்பு வழங்கும் விழா சிந்தல்பாடியில் நடைபெற்றது.

    இவ்விழாவிற்கு தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் தலைமை வகித்து கேக் வெட்டி 60 பாதிரியார்களுக்கு கிருஸ்மஸ் பரிசு தொகுப்பு வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் பீட்டர் கடத்தூர் இணை ஒருங்கிணைப்பாளர்கள் சி.எஸ்.சி.சர்ச் பால்ராஜ், சிந்தல்பாடி ஜோதி,சமத்துவபுரம் தீமோத்தேயு ராஜா, தி.மு.க. முன்னாள் மாநில தொண்டரணி அமைப்பாளர் ராஜேந்திரன், கடத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் நெப்போலியன், மொரப்பூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் இ.டி.டி.செங்கண்ணன், மாவட்ட ஆதிதிராவிட நல குழு தலைவர் குபேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் பத்மாவதி சரவணன், துணை தலைவர் தேவகி சின்னத்தம்பி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ராம கிருஷ்ணன், ஓய்வு பெற்ற ஆசிரியர் நடராஜன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திருமால், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் அண்ணாதுரை, நிர்வாகிகள் பாண்டியன், அன்பழகன், சிவகுமார் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×