search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமாவளவன் சகோதரிக்கு தருமபுரி வி.சி.க சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி
    X

    திருமாவளவன் சகோதரிக்கு தருமபுரி வி.சி.க சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி

    • தருமபுரி நகர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டது.
    • வான்மதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    தருமபுரி,

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவனின் அக்கா பானுமதி (எ) வான்மதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி தருமபுரி மத்திய மாவட்ட மற்றும் தருமபுரி நகர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டது.

    இதில் தருமபுரி மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயந்தி, மாவட்ட பொருளாளர் மன்னன், மண்டல துணைச் செயலாளர் மின்னல் சக்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பானுமதி (எ) வான்மதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    இந்த நினைவேந்தர் நிகழ்ச்சியில் ஏ.மாது (எ) மணிமாறன், நகர துணை செயலாளர் வடிவேலு உமாசங்கர் மற்றும் முகாம் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×