search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி குமாரசாமிப்பேட்டை  மாரியம்மன் கோவில் திருவிழா
    X

    தருமபுரி குமாரசாமிப்பேட்டை மாரியம்மன் கோவில் திருவிழா

    • யாகசாலை பூஜைகளும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகளும் நடைபெற்றது.
    • பக்தர்களுக்கு காப்பு கட்டுதலும், அக்கரைப்பட்டி முனியப்பன் கோவிலில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடும் நடைபெற்றது.

    தருமபுரி,

    தருமபுரி குமாரசாமிப்பேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோவில் 86-ம் ஆண்டு திருவிழா கணபதி பூஜையுடன் தொடங்கியது.

    பின்னர் யாகசாலை பூஜைகளும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகளும் நடைபெற்றது.

    விழாவையொட்டி பக்தர்களுக்கு காப்பு கட்டுதலும், அக்கரைப்பட்டி முனியப்பன் கோவிலில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடும் நடைபெற்றது. தொடர்ந்து இடும்பன் ஊர்வலமும், சக்தி கரகம் அழைத்தலும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    இன்று (புதன்கிழமை) மாரியம்மன், செல்லியம்மன் மற்றும் விருந்தாடியம்மனுக்கு கூழ் ஊற்றும் விழா நடக்கிறது. விழாவின் முக்கிய நாளான நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு 500 இசைக் கலைஞர்கள் பங்கேற்கும் தாரை தப்பட்டை மேளதாளங்கள் முழங்க, மாரியம்மன் பூத வாகனத்தில் உடன் வர விருந்தாடியம்மன் கோவிலுக்கு மாவிளக்கு ஊர்வலம் நடக்கிறது.

    தொடர்ந்து மாலை 3 மணிக்கு செல்லியம்மனுக்கு பொங்கல் வைத்தலும், 4 மணிக்கு செல்லியம்மன் கோவிலுக்கு மாவிளக்கு ஊர்வலமும் நடக்கிறது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 10-30 மணிக்கு மாரியம்மன் கோவிலில் பொங்கல் வைக்கும் விழாவும், மாலை 6 மணிக்கு வாண வேடிக்கையுடன் மேளதாளங்கள் முழங்க சிம்ம வாகனத்தில் மாரியம்மன் திருவீதி உலா மற்றும் மாவிளக்கு ஊர்வலம் நடக்கிறது.

    வருகிற 24-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு தருமபுரி ராஜகோபால் கவுண்டர் பூங்கா அருகில் இருந்து ரிஷப வாகனத்தில் மாரியம்மன் பந்தக்காட்சி ஊர்வலமும், தொடர்ந்து ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் செங்குந்தர் சமூகத்தினர் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×