search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு செங்கோட்டை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
    X

    செங்கோட்டை கோவிலில் சுவாமியை வழிபட்ட பக்தர்கள்.


    புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு செங்கோட்டை கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

    • புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு செங்கோட்டை கோவில்களில் அதிகாலை முதலே துளசிமாலை, வெற்றிலை மாலை அணிவித்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    • செங்கோட்டை சுந்தரராஜபெருமாள் கோவிலில் காலையில் நறுமண பொருட்களால் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.

    செங்கோட்டை:

    புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு செங்கோட்டை அழகிய மனவாள பெருமாள் கோவில், அறம்வளர்த்த நாயகி அம்மன், ஆஞ்சநேயர் கோவிலில்களில் புரட்டாசி சனி கருட சேவை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.

    அதிகாலை முதலே கோவிலில் துளசிமாலை, வெற்றிலை மாலை அணிவித்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    இதே போன்று செங்கோட்டை சுந்தரராஜபெருமாள் கோவிலில் காலையில் நறுமண பொருட்களால் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. காலையிலும், மாலையிலும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பிரானூர் பார்டர் ஆஞ்சநேயர், இலத்தூர் மதுநாதர் அறம் வளர்த்த நாயகி சமேத சனிஸ்வரன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் புரட்டாசி கருட ேசவை கொண்டாடப்பட்டு வருகிறது. கோவிலில் உள்ள ராமர், சீதை, ஆஞ்சநேயர் அறம் வளர்த்த நாயகி சமேத மதுநாதர் சனிஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையும் நடைபெற்றது.

    Next Story
    ×