search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சனி பிரதோஷத்தை முன்னிட்டு தென்காசி காசிவிஸ்வநாதர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
    X

    சனி பிரதோஷத்தை முன்னிட்டு தென்காசி காசிவிஸ்வநாதர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

    • சனி பிரதோஷத்தை முன்னிட்டு கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
    • சுற்றுலா பயணிகளும் விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தென்காசி:

    தென்காசியில் உள்ள பிரசித்தி பெற்ற முக்கிய கோவில்களில் ஒன்றான காசி விஸ்வநாதர் கோவிலில் நேற்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

    இதில் தென்காசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் நேற்று விடுமுறை தினம் என்பதால் குற்றால அருவிகளில் குளிக்க வந்திருந்த வெளியூர் சுற்றுலாப் பயணிகளும் காசி விஸ்வநாதர் கோவிலில் நடைபெற்ற சனி பிரதோஷ விழாவில் குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் கூட்டம் கோவில் முழுவதும் அலைமோதியதால் தென்காசி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    Next Story
    ×