செஞ்சி அருகே மலைப்பகுதியில் இருந்த சாராய ஊறல் அழிப்பு

போலீசாரின் தொடர் நடவடிக்கையால் இங்கு சாராயம் காய்ச்சுவதும், விற்கப்படுவதும் முற்றிலும் ஒழிக்கப்பட்டது.போலீசார் போத்துவாய் மலைப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
செஞ்சி அருகே மலைப்பகுதியில் இருந்த சாராய ஊறல் அழிப்பு
Published on

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்ட செஞ்சியில் உள்ள போத்துவாய் மலைப்பகுதியில் கடந்த காலங்களில் சாராயம் காய்ச்சி விற்கப்பட்டு வந்தது. போலீசாரின் தொடர் நடவடிக்கையால் இங்கு சாராயம் காய்ச்சுவதும், விற்கப்படுவதும் முற்றிலும் ஒழிக்கப்பட்டது. இந்நிலையில் போத்துவாய் மலைப் பகுதியில் சாராய ஊறல் உள்ளதாக துணை போலீஸ் சூப்பிரண்டு கவின்னாவிற்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து அவரது மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் போத்துவாய் மலைப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அங்கிருந்த சாராய ஊறலை போலீசார் கைப்பற்றியனர். அதிலிருந்த 100 லிட்டர் சாராயத்தை தரையில் கொட்டி அழித்தனர். இது குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு கவின்னா கூறுகையில், தற்போது அழிக்கப்பட்டுள்ள சாராய ஊறல் மிகவும் பழைய ஊரலாகும். நாங்கள் தொடர்ந்து இப்பகுதியை கண்காணித்து வருகிறோம். இதனால் இங்கு சாராயம் காய்ச்சுவது ஒழிக்கப்பட்டுளளது. யாரேனும் சாராயம் காய்ச்சினால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என எச்சரித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com