search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அசோலா வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம்
    X

    அசோலா வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

    அசோலா வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம்

    • பல விவசாயிகள் கால்நடைகளுக்கு போதுமான தீவனத்தை உற்பத்தி செய்ய போராடி வருகின்றனர்.
    • கால்நடை தீவனத்துடன் இணைத்து கொடுக்கும்போது பால் உற்பத்தி 15 முதல் 20 சதவீதம் அதிகரிக்கும்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் வட்டாரம், திருவத்தேவன் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் அசோலா வளர்ப்பு செயல்விளக்கம் விவசாயிகளுக்கு நடத்த ப்பட்டது.

    மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) பாலசரஸ்வதி விவசாயிகளிடம் பேசிய போது, அசோலா ஒரு அற்புதமான பசுந்தீவ னம். மேலும் இது ஒரு மிதக்கும் நீர்வாழ் உயிரி ஆகும்.

    இது தண்ணீரின் மேற்பரப்பில் வளரக்கூ டியது. கால்நடை தீவனப் பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வு காரண மாக பல விவசாயிகள் கால்ந டைகளுக்கு போதுமான தீவனத்தை உற்பத்தி செய்ய போராடி வருகின்றனர்.

    அசோலா கால்நடைகள், மீன், முயல் மற்றும் கோழி களுக்கு ஏற்ற நிலையான தீவனமாகும். இது தவிர பண்ணையில் உயிர் உரமாகவும் பயன்படுத்த ப்படுகிறது. அசோலா சாகுபடிக்கு குறைந்த அளவு முதலீடு போதுமானது.

    இது நல்ல தீவனம் மற்றும் உயிர் உரத்திற்கான குறைந்த விலை கொண்ட மாற்றுத் தீர்வாகும் என எடுத்துக் கூறினார்.

    அசோலா வளர்ப்பு குறித்து சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சாந்தி (பொ) பேசியதாவது, அசோலா வளர்ப்ப தற்காக பிளாஸ்டிக் தாள் தொட்டி மற்றும் குளத்தை பயன்படுத்தலாம். அசோலா சாகுபடி குளத்தை உருவாக்குவதற்கு ஓரளவு நிழலாக உள்ள பகுதியை தேர்ந்தெடுத்தால் மிகவும் சிறப்பு.

    ஏனெனில் 30 சதவீதம் சூரிய ஒளி தேவைப்படுகிறது. அதிக சூரிய ஒளி வளர்ச்சியை பாதிக்கும். மரத்தின் அடியில் உள்ள பகுதி மிகவும் ஏற்றதாகும். பெரிய அளவில் அசோலாவை வளர்க்க திட்டமிட்டால் சிறிய கான்கிரீட் தொட்டியை உருவாக்கலாம்.

    கோழிகளுக்கு அசோலா அளிப்பதால் எடை மற்றும் முட்டை உற்பத்தி அதிகரிக்கிறது.1.5 முதல் 2 கிலோ அசோலா கால்நடை தீவனத்துடன் இணைத்து கொடுக்கும்போது பால் உற்பத்தி 15 முதல் 20 சதவீதம் அதிகரிக்கும்.

    ஆடு, முயல் மற்றும் மீன்களுக்கு அசோலா உணவளிக்கலாம் என்றார்.அசோலா வளர்ப்பு செயல் விளக்கத்திற்கான ஏற்பாடு களை உதவி வேளாண்மை அலுவலர் எம்.பிரதீபா, அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ஆ.தமிழழகன் மற்றும் வீ.ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×