என் மலர்
உள்ளூர் செய்திகள்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சையில் ஆர்ப்பாட்டம்
- பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
- அரசு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
தஞ்சாவூர்:
பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
அரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.
மாவட்ட துணை தலைவர்கள் தமிழ்வாணன், ரவிசந்திரன், முருகன், கவிதா, இணை செயலாளர்க் செந்தில்குமார், மகேஷ், அறிவழகன், தமிழ்வா ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட செயலாளர் ரெங்கசாமி, மாநில செயலாளர் கோதண்டபாணி, மாவட்ட பொருளாளர் பாஸ்கரன் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story






