என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரியில் பழங்குடியின குறவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
    X

    குறவர் இன மக்களை சித்தூர் போலீசார் தாக்கியதை கண்டித்து பழங்குடியின குறவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    கிருஷ்ணகிரியில் பழங்குடியின குறவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    • தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழ் பழங்குடி குறவன் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • மலைவாழ் மக்கள் சங்க மாநில குழுத் தலைவர் டில்லிபாபு தலைமை தாங்கினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணாசிலை எதிரில், புளியாண்டப்பட்டியைச் சேர்ந்த குறவர் இன மக்களை சித்தூர் போலீசார் தாக்கியதைக் கண்டித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழ் பழங்குடி குறவன் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதற்கு மலைவாழ் மக்கள் சங்க மாநில குழுத் தலைவர் டில்லிபாபு தலைமை தாங்கினார்.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் சண்முகம், குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்க மாநில பொதுச் செயலாளர் சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் நஞ்சுண்டன், பழங்குடி குறவன் சங்க மாநில பொதுச் செயலாளர் ரவி, மாநிலத் தலைவர் ரமேஷ், மாநில பொருளாளர் கோவிந்தராஜ், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மகாலிங்கம், வட்டச் செயலாளர் சாமு, குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்க மாவட்ட பொருளாளர் வேலு, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் ராதா ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

    இதில் புளியாண்ட ப்பட்டியைச் சேர்ந்த குறவர் இன மக்கள், சித்தூர் போலீ சாரால் அழைத்து சென்று தாக்கியதை கண்டித்தும், பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளா க்கப்பட்டதை கண்டித்தும், சித்தூர் மாவட்ட போலீசார் மீது கடுமையான சட்டப்பிரிவு களில் கைது செய்ய வேண்டும் எனக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

    Next Story
    ×